தீபாவளிக்கு பின் தலைநகர் டெல்லியில் பெய்ய போகும் `செயற்கை' மழை

x

டெல்லியில் நவம்பர் 13 முதல் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகன விதி அமல்படுத்தும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை காரணமாக காற்றின் தரக்குறியீடு மேம்பட்டுள்ளதாகவும், தீபாவளிக்கு பின்னர் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்