சுக்குநூறாக உடைந்த ராணுவ விமானம்...8 பேருக்கு நேர்ந்த கதி - பரபரப்பு காட்சிகள்

x

மிசோரம் மாநிலத்தில் மியான்மர் நாட்டு ராணுவ விமானம் நொறுங்கி விழுந்து 8 பேர் காயமடைந்தனர்.மியான்மர் நாட்டைச் சேர்ந்த ராணுவ விமானம், மிசோரம் மாநிலம் லெங்புயி விமான நிலையத்திற்கு அருகே விழுந்தது. இதில், விமானி உட்பட 13 பணியாளர்கள் பயணம் செய்தனர். காயமடைந்த 8 பேர் மிசோரமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மியான்மரில்

அண்மைக்காலமாக ராணுவத்திற்கும், போராளி குழுக்களுக்கும் இடையே உள்நாட்டு கலவரம் நீடிக்கிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க மிசோரமிற்குள் புகுந்த மியான்மர் ராணுவ வீரர்களை மீட்க இந்த விமானம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. மிசோர​மில் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு, பாதையில் இருந்து விலகி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்