"சிறையில் உள்ள கெஜ்ரிவால் - சிசிடிவி மூலம் பிரதமர் செய்யும் வேலை" - பரபரப்பை கிளப்பிய AAP எம்.பி

x

அரவிந்த் கெஜ்ரிவாலின் சித்ரவதை கூடமாக திஹார் ஜெயில் மாறி வருகிறது என ஆம் ஆத்மி எம்.பி சஞ்செய் சிங் குற்றம் சாட்டியுள்ளார. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரவிந்த் கேஜ்ரிவாலை சிசிடிவி கேமராவின் மூலம் பிரதமர் மோதியும் துணைநிலை ஆளுநரும் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக குற்றம் சாட்டினார். டெல்லி மக்களுக்கான வேலையை விட்டுவிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எப்படி தொந்தரவு கொடுக்கப்படுகிறது என்பதை பார்ப்பதிலேயே துணைநிலை ஆளுநர் மும்முரமாகிவிட்டதாகவும் அரவிந்த் கெஜ்ரிவாலின் சித்திரவதை கூடமாக திகார் ஜெயில் மாறி வருவதாகவும் சஞ்செய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்