"மீண்டும் சிறுத்தை நடமாட்டம்" - தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் புகழ்பெற்ற மல்லிகார்ஜுன சுவாமி கோயில் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது... அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த கோயில் அமைந்துள்ள நிலையில் சில நாட்களுக்கு முன் சத்திரங்கள் அமைந்துள்ள பகுதி அருகே இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று வந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் அதே பகுதியில் அமைந்துள்ள ரெட்டியார் சத்திரம் அருகே சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது... இதனால் பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்க தேவஸ்தானமும் வனத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்