தண்டவாளத்தை மாற்றியதால் வந்த விதி -பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து - அதிகாரிகள் சொன்ன நல்ல செய்தி

x

விசாகப்பட்டினம் அருகே பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், ரயில் ஓட்டுநரின் எச்சரிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்ட பவானி பட்டினம் பயணிகள் ரயில், கொத்தவலசா ரயில் நிலையம் சென்றடைந்தது. இந்நிலையில், ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் ஓட்டுநரின் எச்சரிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், தண்டவாளம் மாறியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில், விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்