தாலி கட்டும் நேரத்தில் - கண்ணில் மிளகு பொடி வீசி - பெண்ணை தரதரவென்று இழுத்துச்சென்ற இளைஞர்கள்

x

ராஜமுந்திரி மாவட்டம் கடியம் கிராமத்தைச் சேர்ந்த பதினா வெங்கடானந்து என்பவரும், கர்னூல் மாவட்டம் சாகலமரி மண்டலத்தை சேர்ந்த கங்கவரம் சினேகா என்பவரும், காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த13-ம் தேதி விஜயவாடாவில் உள்ள துர்கா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வெங்கடானந்து, வீட்டில் உள்ள பெரியவர்கள் சம்மதித்து, மணமகளின் பெற்றோருக்கு தெரிவித்தனர். அவர்களின் ஒப்புதலோடு, ஞாயிற்றுக்கிழமையன்று உறவினர்கள் முன்னிலையில் திருமண வரவேற்பு நடைபெறுவதாக இருந்தது. அன்று மண்டபத்திற்கு வந்த பெண் வீட்டார், முகூர்த்த நேரத்தில் சத்தம் போட்டதோடு, மணப்பெண்ணின் கண்ணில் மிளகு பொடி தூவி தரதரவென்று இழுத்துச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து மணமகனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்