புற்று நோய்க்கு முற்றுப்புள்ளி! - 100 ரூபாயில் குணமாக்கும் மருந்து

x

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக கேன்சர் செல்கள் உயிரிழக்கும். எனினும், அவ்வாறு உயிரிழந்த கேன்சர் செல்கள் வெளியிடும் செல்-ஃப்ரீ க்ரோமட்டின்கள், (cell - free chromatin) மீண்டும் புற்றுநோயை விளைவிக்க கூடும். இதன் மூலம் புற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கான மருந்தை உருவாக்கும் முயற்சியில், டாட்டா நினைவு மையத்தின் மருத்துவர்கள் சுமார் 10 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, உருவாக்கப்பட்ட இந்த மருந்தை 100 ரூபாய்க்கு வழங்க முடியெமனவும் தெரிவித்துள்ளனர். இந்த மருந்துக்கான ஒப்புதல் பெற உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சான்றுக்கு அனுப்பி வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒப்புதல் பெற்ற பின்னர் ஜூன் அல்லது ஜூலை மாதம் முதல் இந்த மருந்து சந்தையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்