"கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த ராமருக்கு கோவில்" மோடியை புகழ்ந்து பேசிய அமித்ஷா
அகமதாபாத் மாவட்டம் சனந்த் பகுதியில் நடந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவில் கலந்துக் கொண்டு உள்துறை அமைச்சர் பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை சொடக்கு போடும் நேரத்தில் மோடி நீக்கிவிட்டதாக கூறினார். 550 ஆண்டுகளாக சொந்த தேசத்தில் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த ராமருக்கு, மோடி கோவிலை கட்டிவிட்டார் என புகழாரம் சூட்டினார். 2002 ஆம் ஆண்டு மோடி கலவரக்காரர்களுக்கு சரியான பாடத்தை கற்பித்தார் எனக் கூறிய அமித்ஷா கூட்டத்தை நோக்கி, அதற்கு பிறகு ஏதாவது கலவரம் நடந்ததா என கேள்வியை எழுப்பினார். 2002 ஆம் பாடம் கற்பிக்கப்பட்ட பிறகு, இன்று வரையில் குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்த யாரும் துணிவதில்லை என அமித்ஷா கூறினார். பாகிஸ்தானுக்கும் சரியான பாடத்தை பிரதமர் மோடி கற்பித்துவிட்டதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்