நடிகர் மோகன்லாலை விடாமல் துரத்தும் வழக்கு - கெடு விதித்த உயர் நீதிமன்றம்

x

நடிகர் மோகன்லால் யானை தந்தம் வைத்திருந்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம், மோகன்லால் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.எர்ணாகுளத்தில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில், சட்டவிரோதமாக யானை தந்தம் வைத்திருந்த‌தாக, 2012ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்த‌து. வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு விசாரணை, பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரும் நவம்பர் 3ஆம் தேதி மோகன்லால் உள்ளிட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த‌து. இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், பெரும்பாவூர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு, ஆறு மாதங்களுக்கு இடைக்கால தடை விதித்த‌து. மேலும் விசாரணைக்காக அடுத்த மாதம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் மோகன்லாலுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்