ஒரு நொடியில் முடிந்த சந்தோசம்...சாலையில் ரத்த வெள்ளம்... மொத்த குடும்பமும் பலி

x

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் கொட்டா துர்காபுரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடாவில் இருக்கும் குணதாலாவிற்கு உறவினர் குழந்தையின் காது குத்து விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். கோதாடா, துர்காபுரம் இடையே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அவர்கள் பயணித்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரில் இருந்த 6 பேரும் மரணம் அடைந்த நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்