செங்கல் சூளையில் திடீரென இடிந்த சுவர்...6 பேர் பலி..கவலைக்கிடத்தில் இருவர் - அதிர்ச்சி சம்பவம்

x

உத்தரகாண்ட் மாநிலத்தில் செங்கல் சூளையில் ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ரூர்க்கி அருகே மங்களூர் கோட்வாலியின் லஹபோலி கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருடன் மீட்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சுடுவதற்காக புகைபோக்கியில் செங்கற்களை நிரப்பும் போது, ​​திடீரென சுவர் இடிந்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்