இளைஞரின் ஒற்றை செயலால் கொடூரமாக பலியான பள்ளி மாணவி | Uttar Pradesh | School Girl

x

உத்தரபிரதேசத்தில் இருக்சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் துப்பாட்டாவை பிடித்து இழுத்ததால், பள்ளி மாணவி மற்றொரு வாகனம் மோதி பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹாரிப்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் மாணவிகள், பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர். அம்பேத்கர் நகர் ஹிராப்பூர் மார்கெட் பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், நான்ஸி என்ற மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த நான்ஸி மீது, பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்த நிலையில், மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்த நபர், கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்