திடீரென நடுரோட்டில் விழுந்த பாறை... கதிகலங்கி போன வாகன ஓட்டிகள்

x

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள மலையில் இருந்து திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்திர கீலாத்திரி மலையின் மீது கனக துர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மலையின் அடிவாரத்தில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்தன. அப்பகுதி பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்தை தடை செய்த அதிகாரிகள், பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்