நாடு இதுவரை பார்க்காத கல்யாணம் - அம்பானியின் சொக்க வைக்கும் பிளான்

x

அம்பானி வீட்டு திருமணத்தை முன்னிட்டு கிராம மக்களுக்கு ஆனந்த் மற்றும் முகேஷ் அம்பானி தமது கரங்களால் உணவு பரிமாறினர்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இவர்களது திருமணம் ஜூலை 12 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், குஜராத் மாநிலம் ஜாம் நகரில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் தொடங்கியுள்ளது.அதன் ஒருபகுதியாக ஜோக்வாட் கிராம மக்களுக்கு குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் மணமகன் ஆனந்த அம்பானி ஆகியோர் தங்களது கரங்களாலேயே கிராம மக்களுக்கு உணவு பதார்த்தங்களை பரிமாறினர். ராதிகா மெர்சண்டின் பாட்டி, பெற்றோர் உள்ளிட்டோரும் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறினர். அடுத்த மூன்று நாட்களுக்கு 51 ஆயிரம் கிராம மக்களுக்கு உணவு பரிமாறும் நிகழ்வு தொடர உள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்