திடீர் எண்ட்ரி கொடுத்த கும்பல்...கலவரக்காடான வாக்குச்சாவடி...ராஜஸ்தானை தொற்றிய பதற்றம்

x

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் வாக்குப்பதிவின்போது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், வாக்குச்சாவடி முகவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதில் வாக்குச்சாவடி முகவர் காயமடைந்தார். சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்