மின்னல் வேகத்தில் வந்த கண்டெய்னர்... திடீரென குறுக்கே வந்த பைக் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

மின்னல் வேகத்தில் வந்த கண்டெய்னர்... திடீரென குறுக்கே வந்த பைக் - தலைகுப்புற கவிந்த லாரி - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் அருகே, சாலை தடுப்பில் கண்டெய்னர் லாரி மோதி விபத்திற்குள்ளானதில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அடிலாபாத் அருகே 44வது தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்களை ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரி வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் வாகனத்தை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்