திடீரென குடிநீர் தொட்டியில் விழுந்த குழந்தை.. உயிரை காப்பாற்ற வந்த கடவுள் - திக் திக் காட்சிகள்

x

திடீரென குடிநீர் தொட்டியில் விழுந்த குழந்தை.. உயிரை காப்பாற்ற வந்த கடவுள் - திக் திக் காட்சிகள்

பெங்களூருவில் குடிநீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தையை காவல்துறை எஸ்.ஐ. ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

பெங்களூரு பேடராயனபுரா பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை திடீரென10 அடி ஆழ குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதனை அவ்வழியாக சென்ற எஸ்.ஐ., நாகராஜ் கவனித்து, உடனடியாக குழந்தையை மீட்டார். தற்போது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்.ஐ.நாகராஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்