உரு தெரியாமல் அழித்த இயற்கை.. சீட்டு கட்டு போல் சரிந்த வீடுகள் - 71 பேர் பலி.. 13 பேர் மாயம்

x

இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டித் தீர்த்த தொடர் கனமழையின் எதிரொலியாக, பல்வேறு மாவட்டங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி கடந்த மூன்று நாட்களில் மட்டும் 71 பேர் உயிரிழந்துள்ளதாக கூறும் அதிகாரிகள், 13 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படும் சூழலில், இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புக்குழு மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்