இந்தியா முழுவதும் காலை 7 மணி முதல் பரபரக்கும் 7 சட்டப்பேரவை தொகுதிகள்

x

உத்தரப்பிரதேசம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கோசி, ஜார்கண்டின் டும்ரி, மேற்குவங்க மாநிலம் தூப்குரி, கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியாக உள்ள புதுப்பள்ளி, உத்தரகண்ட் மாநிலம் பாகேஸ்வர், திரிபுராவின் தன்கர், போக்ஸநகர் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்