24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் பலி - மகாராஷ்டிராவை வாட்டும் சோகம்

x

மகாராஷ்ட்ரா மாநிலம் நேண்டட் மாவட்டத்தில் உள்ள சங்கராவ் சவான் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் மருந்து பற்றாக்குறை மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக 31 நோயாளிகள் உயிரிழந்தனர். அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் நோயாளிகள் சிலர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாக்பூர் மருத்துவக் கல்லூரி மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியின் தரவுகளை ஆய்வு செய்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்