அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

x

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில், மேலும் 7 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. பாம்புக் கடியால் பதிக்கப்பட்ட சிலர் கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வந்ததே உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் மற்றும் மருந்துகளின் இருப்பு குறைவாக இருப்பதும் அதற்கு காரணம் என கூறப்படுகிறது. மருத்துவமனையில் 500 படுக்கைகளே உள்ள நிலையில் ஆயிரத்து 200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையை ஆய்வு செய்த முன்னாள் முதல்வர் அசோக் சவாண் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்