நண்பனை காப்பாற்ற முயன்ற போது விபரீதம் - கிருஷ்ணா நதியில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதியில் குளிக்கச் சென்ற ஐந்து சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
சந்திரலபாடு கிராமத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள், கிருஷ்ணா நதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் ஒரு சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவனை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த 4 சிறுவர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.  மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் அங்கு வந்த மீட்பு குழுவினர், அஜய், சரண் ஆகிய இருவரின் உடல்களை மீட்டனர். மேலும் பாலயேசு, சன்னி,  ராகேஷ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 2-வது நாளாக தேடி வருகின்றனர். ஒரே கிராமம், ஒரே பள்ளியைச் சேர்ந்த 5 சிறுவர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்தால் சந்திரலபாடு கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்