சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை - பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, பம்பை பகுதியில் இருமுடி கட்ட தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை - பக்தர்கள் வருகை அதிகரிப்பு
x
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால், 16 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் 10 இடங்களில் நேரடியாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நேரடியாக பதிவு செய்யும் பக்தர்களின் வசதிக்காக பம்பை கணபதி கோவில் அருகே இருமூடி கட்ட தேவசம் போர்டு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை பகுதியில் இன்று மழையில்லாததால் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் பம்பையில் பக்தர்கள் குளிக்க தடை தொடர்கிறது. 



Next Story

மேலும் செய்திகள்