வேளாண் சட்டம் ரத்து - கங்கனா அதிருப்தி

3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இம்முறையும் சர்ச்சைக்குரிய வகையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
வேளாண் சட்டம் ரத்து - கங்கனா அதிருப்தி
x
3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றதற்கு நடிகர், நடிகைகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை விமர்சித்து நடிகை கங்கனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டது வருந்தத்தக்கது, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பதிலாக தெருவில் இருப்பவர்கள் சட்டம் இயற்ற தொடங்கி விட்டார்கள் என்றால் இதுவும் ஜிகாதி தேசமே என்று தெரிவித்துள்ளார். மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை நினைவு கூர்ந்த அவர், மக்களை வழிடத்த வேண்டிய தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, லத்தி மற்று சர்வாதிகாரமே ஒரே தீர்மானம் என்றும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்