பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கான அனுமதி வழங்கும் கடிதத்தை தற்காலிகமாக நிறுத்திய கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையின் கீழ் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கான அனுமதி வழங்கும் கடிதத்தை கேரள அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கான அனுமதி வழங்கும் கடிதத்தை தற்காலிகமாக நிறுத்திய கேரள அரசு
x
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை  பலப்படுத்த இடையூறாக உள்ள 15  மரங்களை வெட்டுவதற்கான  உத்தரவை  PCCF மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் பென்னிசன் தாமஸ் ஆகியோர் அனுமதி அளித்தனர். இந்த உத்தரவு நகல், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே. ஜோஸிடமும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து பேசிய கேரள அமைச்சர்  ஏ.கே.சுசீந்திரன், உத்தரவு நகல் வழங்கப்பட்டது தங்களுக்கு தெரியாது என்றும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பிய பிறகே தங்களுக்கு தெரியும் என கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணை பிரச்னையில் அரசு எடுத்த நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறிய அவர், இது தொடர்பில் அவசர அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த அறிக்கையை பெறுவதற்கு முன்பு உத்தரவை தற்காலிகமாக  நிறுத்தி முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் முதலமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அமைச்சர்  ஏ.கே.சுசீந்திரன் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்