போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கானுக்கு ஜாமின்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கானுக்கு ஜாமின்
x
சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாக ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரை, கடந்த 3ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆர்யன் கான், ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமின் மனுவை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் நிராகரித்தது. இந்நிலையில், அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணயில், ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்