"நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை" - உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
x
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இரு மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு நடத்த மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இரு மாணவர்களின் புகார்கள் குறித்து பின்னர் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்