உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழைக்கு இதுவரை 52 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
நீடித்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதோடு, பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தில் தத்தளித்து வரும் பல கிராமங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார்.
Next Story