கேரளாவில் கனமழை எதிரொலி: சபரிமலையில் புனரமைப்பு பணிகள் பாதிப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் தொடங்க 25 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கனமழை காரணமாக சபரிமலையில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் தொடங்க 25 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கனமழை காரணமாக சபரிமலையில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. புனரமைப்புக்கு தேவையான பொருட்களை சன்னிதானத்திற்கு கொண்டு செல்ல முடியாததால் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. இருப்பினும் சீசன் தொடங்கும் முன் அனைத்து பணிகளும் போர்க்கால அடிப்படையில் முடிக்கப்படும் என தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்தார்.
Next Story