22 வயது இளம்பெண்ணை பல முறை கத்தியால் குத்தி கொன்ற முன்னாள் காதலன் - பதை பதைக்கும் காட்சிகள் வெளியீடு

டெல்லி பிந்தாபூர் பகுதியில் இளம்பெண்ணை முன்னாள் காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த போது சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
22 வயது இளம்பெண்ணை பல முறை கத்தியால் குத்தி கொன்ற முன்னாள் காதலன் - பதை பதைக்கும் காட்சிகள் வெளியீடு
x
தனது நண்பர்கள் அழைத்ததன் பேரில், டோலி பாபர் என்ற பெண், தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சம்பவத்தன்று  டெல்லியின் பிந்தாபூர் பகுதியில் உள்ள மதியலா சாலையில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது, அங்கிருந்த அவரது முன்னாள் காதலன் அங்கித் காபா சற்றும் எதிர்பாராத விதமாக தாம் வைத்திருந்த கத்தியை கொண்டு, டோலியை சரமாரியாக தாக்கியுள்ளார். டோலி பாபரும் அங்கித் காபா என்பவரும் காதலித்து பிரிந்த நிலையில், அங்கித் காபா மீண்டும் தன்னை காதலிக்க டோலியை வற்பறுத்தியுள்ளார். இதற்கு டோலி ஒப்புக்கொள்ளாததால், அங்கித் காபா தனது நண்பர்கள் மூலம் அவரை வரவழைத்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் டோலி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்