உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு
x
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும்,  நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ள நிலையில், 5 பேர் மாயமாகி உள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்த உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாயும், வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிட்டார். இதனிடையே வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கேட்டறிந்தனர். 

உத்தரகாண்ட் கனமழைக்கு 34 பேர் பலி - மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள்

இதனிடையே, நாகினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் 36 பேரை மீட்டுள்ளனர். நைனிடால் பகுதியில் ஒரு கடையில் இருந்து உள்ளே சிக்கியவர்களை ராணுவ வீரர்கள் மீட்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 



Next Story

மேலும் செய்திகள்