கேரளாவில் வரும் 25-ம் தேதி திரையரங்குகள் திறப்பு - திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு

கேரளாவில் வருகிற 25-ம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என அந்த மாநில திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் வரும் 25-ம் தேதி திரையரங்குகள் திறப்பு - திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு
x
கொரோனா 2-வது அலை காரணமாக, கேரளாவில் மூடப்பட்ட திரையரங்குகளை திறக்க, அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் திரையரங்குகளை வருகிற 25-ம் தேதி திறக்க உள்ளதாக கேரள திரையரங்குகள் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்தவர்கள் மட்டும் திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்