"இடுக்கி, பம்பா, இடமலையார் அணைகள் திறப்பு" - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

கேரளா மாநிலம் இடுக்கி, பம்பா மற்றும் இடமலையார் அணைகள் செவ்வாயன்று திறக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
இடுக்கி, பம்பா, இடமலையார் அணைகள் திறப்பு - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி
x
கேரளா மாநிலம் முழுவதும் கடந்த சனிகிழமை முதல்  கனமழை பெய்ததால் மாநிலம் முழுவதும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக  பல அணைகள் நிரம்பி வருகிறது. இதுவரை 28 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடுக்கி, பம்பா மற்றும் இடமலையார் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்கிழமையன்று, திறக்கப்படவுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன்  தெரிவித்துள்ளார் . இடமலையாறு, பம்பா, இடுக்கி அணைகள் திறக்கப்படும் என்றும், இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் குறிப்பிட்டார். 
தற்போது மாநிலத்தில் 240 நிவாரண முகாம்களில், சுமார் 2541 குடும்பங்களை  சேர்ந்த 9081 பேர்  தங்க வைக்கப்பட்டுள்ளதாக  முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்