விமானத்தில் போதை பொருள் கடத்தல் - ரூ.5.5 கோடி போதை பொருள் பறிமுதல்

கேரளாவுக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
விமானத்தில் போதை பொருள் கடத்தல் - ரூ.5.5 கோடி போதை பொருள் பறிமுதல்
x
கொச்சி விமானநிலையத்திற்கு கத்தார் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடமைகளை புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் நைஜீரியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடத்தி வந்த 580 கிராம் கோகோயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், ஆப்பிரிக்க நாடுகளில்இருந்து இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு போதை பொருள் விநியோகம் செய்த‌து தெரியவந்த‌து. இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கிருந்த மற்றொரு நைஜீரிய பெண்ணும் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்