கனமழையால் மின் இணைப்புகள் துண்டிப்பு - 60 மின்மாற்றிகள் சேதம் என தகவல்

கேரளாவில் பதிவான கனமழையால் மின்சாரதுறைக்கு 13 கோடியே 67 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனமழையால் மின் இணைப்புகள் துண்டிப்பு - 60 மின்மாற்றிகள் சேதம் என தகவல்
x
பத்தினம்திட்டா, பாலா மற்றும் தொடுபுழாவில் அதிக மழைப்பொழிவு இருந்ததால் 60மின் மாற்றிகள் சேதமடைந்தன. மாநிலம் முழுவதிலும் 4 லட்சம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 11 கேவி மின்கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைந்தன. இந்த நிலையில் போர்க்கால அடிப்படையில் மின் இணைப்புகள் சரிசெய்யப்படும் என மின்சாரத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, கனமழையால் மின் தேவை குறைந்துள்ளதாகவும், தினசரி நுகர்வு மின் தேவை 3400 மெகாவாட் அளவுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்