உ.பி.யில் அகிலேஷ் யாதவ் வீடு முன்பு பரபரப்பு: தடுத்து நிறுத்திய போலீஸ்- இருதரப்பு மோதல்

உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாதி தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஜீப் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உ.பி.யில் அகிலேஷ் யாதவ் வீடு முன்பு பரபரப்பு: தடுத்து நிறுத்திய போலீஸ்- இருதரப்பு மோதல்
x
வேளாண் சட்ட எதிர்ப்பு விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்றதாக அகிலேஷ்யாதவ் கண்டனம் தெரிவித்தார். விவசாயிகளை சந்திக்க புறப்பட்ட அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதைக் கண்டித்து அகிலேஷ் தர்ணாவில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் சமாஜ்வாதி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்போது, போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதை கட்சியினர் கொளுத்தியதாக போலீஸ் குற்றம்சாட்டியது. போலீசாரை ஜீப்பை கொளுத்திவிட்டு, போராட்டத்தை வலுவிழக்க செய்வதாக அகிலேஷ் குற்றம்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்