எல்லையை தாண்டிய சீன வீரர்கள் - சீனாவிற்கு திரும்பியதாக தகவல்

சென்ற மாதத்தில், உத்தர்காண்ட் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நூற்றுக்கும் அதிகமான சீன ராணுவத்தினர் கடந்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
எல்லையை தாண்டிய சீன வீரர்கள் - சீனாவிற்கு திரும்பியதாக தகவல்
x
2020 ஜூன் மாதத்தில் லடாக் பகுதியில், இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய வீரர்களும், ஏராளமான சீன வீரர்களும் உயிரிழந்தனர்.  இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே எல்லைப் பிரச்சனைகள் அதிகரித்தன. சமீப காலங்களில், எல்லைப் பகுதியில் ராணுவ கட்டமைப்புகளையும், தளவாடங்களையும் சீனா வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 30 அன்று, உத்தர்காண்ட் மாநிலத்தின் பரஹோட்டி பகுதியில், எல்லையைத் தாண்டி, நூற்றுக்கும் அதிகமான சீன ராணுவ வீரர்கள், இந்திய பகுதிக்குள் நுழைந்தாக தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் சில மணி நேரங்கள் கழித்து, மீண்டும் சீனாவிற்கு திரும்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உத்தர்காண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி இதை மறுத்துள்ளார். தற்போது இந்த பகுதியில் இந்தோ திபேத் எல்லைக் காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்