"அணு ஆயுத குறைப்பில் இந்தியா உறுதி" - வெளியுறவு செயலாளர் ஐ.நா.வில் பேச்சு

முழுமையான, பாகுபாடற்ற அணு ஆயுத ஒழிப்பில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத குறைப்பில் இந்தியா உறுதி - வெளியுறவு செயலாளர் ஐ.நா.வில் பேச்சு
x
முழுமையான, பாகுபாடற்ற அணு ஆயுத ஒழிப்பில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா தெரிவித்துள்ளார். அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், எந்த ஒருநாட்டிற்கும் எதிராக இந்தியா முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என்று உறுதி அளித்தார். மேலும், சர்வதேச கண்காணிப்பின் கீழ், படிப்படியான அணு ஆயுத குறைப்பில் இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அணு ஆயுத ஒழிப்பு என்பது முழுமையானதாகவும், பாகுபாடு அற்றதாகவும் இருக்க வேண்டும் என ஷிரிங்லா வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்