தூக்கி எறியும் தேங்காய் ஓட்டில் அழகிய மயில் - கைவினைப் பொருளில் சாதிக்கும் பட்டதாரி

ஒடிசா அருகே தேவையில்லை என தூக்கி எரியும் தேங்காய் ஓட்டில், வீட்டை அலங்கரிக்கும் அழகிய பொருட்களை செய்து லட்சகணக்கில் பணம் ஈட்டி வருகிறார் எம்.பி.ஏ. பட்டதாரியான தேவி பிரசாத் தாஸ்.
x
கோவில் நகரமான புவனேஷ்வரை சேர்ந்த தேவி பிரசாத் டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆர். வேலை பார்த்து வந்த நிலையில், அதனை உதறி தள்ளிவிட்டு தனக்கு பிடித்த அழகிய கைவினை பொருட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். கோவில்களில் உடைக்கப்படும் தேங்காய்களை விலை கொடுத்து வாங்கி, அதன் ஓட்டில் விலங்குகளையும், வீட்டு அலங்கார பொருட்களையும் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்