"5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா " - கோவா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவிற்கு வருகை தரும் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா  - கோவா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு
x
கோவாவில்  கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின் நிறைவு விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். 


அப்பொழுது பேசிய அவர், இயற்கை சீற்றங்களுக்கு இடையே தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை ஊழியர்களான கொரோனா வாரியர்ஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். 


இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், தடுப்பூசித் திட்டத்தில் செயல்பட்ட உறுப்பினர்கள் என அனைவருக்கும் பாராட்டுகளை பகிர்ந்து கொண்ட பிரதமர், 


அனைவரின் முயற்சியில் தான் இந்தியாவில் ஒரே நாளில் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 


தனது பிறந்தநாளில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றுமில்லாத அளவிற்கு உணர்ச்சி வசப்பட வைத்ததாகவும் கூறினார். 


தடுப்பூசி திட்டத்தில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய மாநிலங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட மோடி, 


இந்தியாவிற்கு வருகை தரும் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்