விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை - பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஏற்பாடு

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை - பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஏற்பாடு
x
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, செயற்கை முறையில் விபத்து போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், விமானத்தின் இரண்டாவது இயந்திரம் தீப்பிடித்து எரிவதாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். பின்னர், பயணிகளை மீட்பது, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை, மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை நிகழ்த்தப்பட்டன.  

Next Story

மேலும் செய்திகள்