பிரமாண்ட ராணுவ கூட்டு பயிற்சி - இந்தியாவின் நாகா படைப்பிரிவினர் பங்கேற்பு
"Zapad-2021" ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய இராணுவத்தின் நாகா படைப்பிரிவை சேர்ந்த 200 வீரர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.
"Zapad-2021" ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய இராணுவத்தின் நாகா படைப்பிரிவை சேர்ந்த 200 வீரர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் ஒன்றினைந்து "Zapad-2021" என்கிற கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாட்டு எல்லைகள் மற்றும் பால்டிக் கடலில் ஒரு வார காலம் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. 80 போர் விமானங்கள், 300 டாங்கிகள், 15 போர்க் கப்பல்கள் மற்றும் ஏராளமான ஹெலிகாப்டர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுப்படுத்தப்பட்டு பிரமாண்ட முறையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
Next Story