புதுச்சேரி சென்ற குடியரசு துணைத் தலைவர்- மகாகவி பாரதியார் படத்துக்கு மரியாதை
புதுச்சேரி சென்றுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மகாகவி பாரதியாரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, வெங்கையா நாயுடு புதுச்சேரி சென்றுள்ளார். ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டிற்கு சென்ற அவர், பாரதியாரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, பாரதியாரின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story