"விமானியின் தவறே விபத்துக்கு காரணம்" - கோழிக்கோடு விமான விபத்தின் அறிக்கை

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்கு காரணம் விமானியின் தவறு என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
விமானியின் தவறே விபத்துக்கு காரணம் - கோழிக்கோடு விமான விபத்தின் அறிக்கை
x
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கடந்த ஆண்டு ஆகஸ்ட்  7ஆம் தேதி கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் உயிரிழந்த நிலையில், 96 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான விசாரணை அறிக்கையில், விமானியின் தவறே விபத்துக்கு காரணம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இரண்டு முறைக்கு மேல் முயற்சித்தும் விமானம் தரையிறங்க இயலவில்லை என்றால் மற்றொரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் அதை விமானி பின்பற்றவில்லை என, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்