ரைஸ் புல்லிங் பெயரில் மக்களிடம் மோசடி - டெல்லியில் இருந்தவரை கைது செய்த போலீஸ்
ரைஸ் புல்லிங் பெயரில் மக்களை ஏமாற்றி மோசடி செய்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரைஸ் புல்லிங் பெயரில் ஏமாற்றப்பட்டதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. இதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதனிடையே முக்கிய குற்றவாளியான டெல்லியை சேர்ந்த சித்தார்த் ஜெயின் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த ஷேக் முகைதீன் என்பவரும் கைது செய்யப்பட்டார். சித்தார்த் ஜெயினிடம் நடந்த விசாரணையில் தன்னிடம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரைஸ் புல்லிங் கலசம் இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறி உள்ளார். அந்த கலசத்தை பார்க்க 30 லட்ச ரூபாய் மதிப்பிலான சிறப்பு உடை அணிய வேண்டும் என கூறி ஏமாற்றியது தெரியவந்தது. ஆந்திரா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த தொழிலதிபர்களிடம் இவர் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
Next Story