நிபா வைரஸ் பாதித்த சிறுவன் உயிரிழப்பு: சிறுவனுடன் தொடர்புடையவர்கள் கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நிபா வைரஸ் பாதித்த சிறுவன் உயிரிழப்பு: சிறுவனுடன் தொடர்புடையவர்கள் கண்காணிப்பு
x
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 12 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்நிலையில் சிறுவன் வசித்த பகுதியில் இருந்தவர்கள் மற்றும் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களின் பரிசோதனை மாதிரிகள் புனேவில் உள்ள   வைரலாஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களில் 30 பேருக்கு நிபா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. மருத்துவ கண்காணிப்பில் உள்ள அனைவரும் நலமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கேரளாவில் நிபா வைரஸ் பயம் நீங்கி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்