உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 9 நீதிபதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி

உச்சநீதிமன்றத்தின் 9 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்று கொண்டனர்.
x
உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி பேலா திரிவேதி, சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி. ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. நரசிம்மா ஆகியோரது பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜீயம் பரிந்துரைத்து. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது, கடந்த 26ம் தேதி 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்தார்.  இந்த நிலையில், புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்