14 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை - 5 கிலோ ஐஇடி வெடிப்பொருட்கள் பறிமுதல்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாச வேலைகளுக்கு பயன்படுத்த எடுத்து வரப்பட்ட 5 கிலோ ஐஇடி வெடிபொருட்களை கைப்பற்றிய என்.ஐ.ஏ. லஷ்கர் -இ-முஸ்தபா அமைப்பின் தலைவனை கைது செய்துள்ளது.
14 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை - 5 கிலோ ஐஇடி வெடிப்பொருட்கள் பறிமுதல்
x
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாச வேலைகளுக்கு பயன்படுத்த எடுத்து வரப்பட்ட 5 கிலோ ஐஇடி வெடிபொருட்களை கைப்பற்றிய என்.ஐ.ஏ. லஷ்கர் -இ-முஸ்தபா அமைப்பின் தலைவனை கைது செய்துள்ளது.ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் சதித்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக வந்த தகவலை அடுத்து சோபியான், அனந்த்நக், பனிஹால், சன்ஜ்வான் உள்ளிட்ட 14 இடங்களில் தேசிய புலனாய்வு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, லஷ்கர் - இ- முஸ்தபா அமைப்பின் தலைவன் ஹிதாயத்துல்லா மாலிக்கை கைது செய்தனர். இதேபோன்று கடந்த மாதம் பனிஹால் பகுதியில் இரு தீவிரவாதிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஐந்தரை கிலோ ஐஇடி வெடிப்பொருட்களை கைப்பற்றினர். இந்த வெடிப்பொருட்களை மதம் சார்ந்த இடங்களில் வெடிக்க வைத்து காஷ்மீரின் அமைதியை குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

Next Story

மேலும் செய்திகள்