"தன்னால் மனைவியின் பெயருக்கு கலங்கம்" - ராஜ் குந்த்ரா பங்களாவில் போலீஸ் விசாரணை

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்த விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நீதிமன்ற காவலை, வரும் 27 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது, மும்பை நீதிமன்றம்...
தன்னால் மனைவியின் பெயருக்கு கலங்கம் - ராஜ் குந்த்ரா பங்களாவில் போலீஸ் விசாரணை
x
என்றும் சர்ச்சைக்கு பெயர்போனவர்... பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ... ஐபிஎல் சூதாட்டம், பணமோசடி, தங்க மோசடியென இவர் மீதான புகார் பட்டியல் ஒருபுறம் நீள.... தற்போது ஆபாச படம் எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த விவகாரத்தில் கைதாகியுள்ளார், ராஜ் குந்த்ரா... இதனிடையே, ராஜ் குந்த்ராவை கைது செய்தது சட்டவிரோதமானது என கூறி, மும்பை நீதிமன்றத்தை அதிர வைத்துள்ளார், அவரது வழக்கறிஞர்.... தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வாய்ப்பு கேட்டு வருபவர்களை ஆபாச படங்களில் ராஜ் குந்த்ரா நடிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கில் அவரை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது, மும்பை நீதிமன்றம்.இதையடுத்து, ஆபாச படமெடுக்கப்பட்டதாக கூறப்படும் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவின் பங்களாவில்... ராஜ் குந்த்ராவை அழைத்து சென்று மும்பை போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது.ஆபாச பட விவகாரம் தொடர்பாக ஷில்பா ஷெட்டி முன்னரே அறிந்திருந்தாரா என்பது குறித்து, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது... 
தன்னை சுற்றி எழும் சர்ச்சைகளால் தனது மனைவி ஷில்பாவின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் என ராஜ் குந்த்ரா வருந்தியதாக கூறப்படுகிறது... இதேபோல்... கணவருடனான தனது புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷில்பா ஷெட்டி, இது தங்களுக்கு சோதனை காலம் என்றாலும்.... தாங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை நினைவு கூர விரும்புவதாக தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்