நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் - பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் - பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு
x
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பல்வேறு கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் இதில் பங்கேற்ற நிலையில், கூட்டத் தொடரின் முதல் நாளில், மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். கூட்டத் தொடரின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய மோடி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்ட நிலையில், பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் அமைச்சராவதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்கவில்லை முடியவில்லை என்று மோடி தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே பிற்பகல் வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்